Tuesday, April 21, 2015

A small tour with JCI friends

Since last year I m being a active member of JCI Thiruthangal. Last Sunday we all went for a trip near rajapalayam.

It was a nice day with all the members, we enjoyed a lot.

As my postpaid airtel no is not reachable due to low tower , Mr.manivel sir gave my tata prepaid no to a blood request at virudhunagar b- and successfully made d arrangement with d help of selva machan , saravanan Anna and ranjith. A big tuanls to them.

Our JCI whatsapp group was recreated at this day.

Sunday, April 12, 2015

இந்தியாவை பின்னுக்கு தள்ளும் விஷயங்கள்..

.
1. சாலையில் எச்சில் துப்புதல். கண்ட கண்ட இடத்தில் சிறுநீர் கழித்தல்.
{இதில் கண்டிப்பாக பெரும்பாலானோருக்கு பங்கு உண்டு.}
2. சிக்னலை மீறுவது, தவறான பாதையில் ஓட்டுவது :
{இது இந்தியாவை பொறுத்தவரை மிக சர்வ சாதாரணமான விஷயம் ஆகிவிட்டது. இவற்றை தடுக்க கண்டிப்பாக மாற்றம் வர வேண்டும். தேவையில்லாமல் ஒலி எழுப்புவதுமே தவறான ஒன்று. போக்குவரத்து நெரிசல் தான் இங்கே மோசமான ஒன்று.}
3. குப்பைகளை கொட்டுவது :
{நம்மவர்களுக்கு அழகான இடத்தை பார்த்தாலே குப்பை கொட்ட தோன்றுகிறது. இதற்கு படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடே இல்லை. இதனாலே பல கலைகளையும், நிலைகளையும் இழந்து நிற்கிறோம்.}
4. வரிசையை முந்தியடித்தல் :
{இந்த இடத்தில வீரத்தை சிலர் தப்பாக புரிந்துவிட்டனர் போலும். எதற்கு எடுத்தாலும் அவசரம். பொறுமை என்பது எள்ளளவும் இங்கே இல்லை. நிற்கிற ஒருவனும் முன்னும் பின்னுமாய் தள்ளிக்கொண்டு தான் நிற்கிறான்.}
5. விட்டு கொடுக்காத பழக்கம் :
{அனைத்திற்கும் விட்டுகொடுக்க சொல்லவில்லை, சில காரணங்களுக்கு மட்டும் கூட இங்கே இறங்க மறுக்கின்றனர். ஒரு பொது மின்தூக்கியில் ஒரே முறையில் முன்னூறு பேர் ஏற நினைத்தால் அது எப்படி...? அவசர ஊர்தி கூட சாலைகளில் வழிக்காக பிச்சை எடுக்கின்றன.}
6. நடுத்தர நிலையை ஏற்றுகொள்வது :
நடுத்தர நிலையில் இருந்து முன்னேற நினைப்பது சரியான விஷயம் தான், ஆனால் அதற்காக இங்கே எவ்வளவு பொய் புரளிகள், பித்தலாட்டங்கள், லஞ்சம், ஊழல், Etc... Etc.... Etc.....
இங்கே சகிப்புத்தன்மை தண்ணீரில் கரையும் உப்பு தான்.
இங்கே உண்மை தொண்டனாய் இருக்க யாருக்கும் ஆசை இல்லை, தலைவன் பதவிக்கே முந்தியடிகின்றனர்.
7. மனிதனை மனிதன் மதிப்பது இல்லை:
(முன்னுக்கு வருபவனை அழிக்க மட்டுமே நினைப்பது. நம் மக்களை நாமே மதிக்காத போது எப்படி முன்னேற முடியும்.)
8. ஜாதி வெறி - மத வெறி – இன வெறி:
நம் நாட்டின் சாபக்கேடு என்றே இதனை சொல்லலாம்......!!
குறிப்பு:- இதை பதிவதன் நோக்கம், நம்முடைய அவலங்களை நாமே பதிந்து, நமது மேல் நாமே அசிங்கத்தை பூசிக்கொள்வதர்க்காக அல்ல....
தனி மனிதன் திருந்தினால் தான், நாடு திருந்தும். இதை படித்த பிறகு ஓரிருவர் திருந்தினால் கூட போதும்... இந்த பதிவின் நோக்கம் முழுமை பெரும்.